Wednesday, May 20, 2015

வழிகாட்டியாக இரு


* வழிபாடு உதட்டளவில் மட்டும் இருப்பது கூடாது. இதயத்தின் அடி ஆழத்தில் இருந்து கனிவுடன் எழ வேண்டும்.

* எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றுக்கொன்று இணைந்திருக்கும் வாழ்வே மனிதனுக்கு மதிப்பளிக்கும்.

* நல்லவனாக இருந்தால் மட்டும் போதாது. பிறருக்கு நல்ல வழிகாட்டியாகவும் இருக்க வேண்டும்.

* சூழ்நிலை எப்போதும் சாதகமாக இருப்பது இல்லை. வெற்றியும், தோல்வியும் கலந்தது தான் வாழ்க்கை.

* பகுத்தறிவால் பக்தியை ஆராய்ச்சி செய்ய வேண்டாம். அன்பால் அதற்கு மதிப்பு கொடுங்கள்.

0 comments:

Post a Comment