Wednesday, May 20, 2015

காலம் தவறாதே


* இயற்கையிடம் பாடம் கற்றுக் கொள். சூரிய, சந்திரனைப் போல காலம் தவறாமல் பணி செய்.

* சிறு நெருப்பு பெரிய காட்டுத்தீயாக பரவுவது போல, மனதில் எழும் தீய ஆசை பெருந்தீமைக்கு வழி வகுக்கும்.

* கடவுளைச் சத்தியமாக நம்பத் தொடங்கினால், நீ செல்லும் இடத்திற்கு சொர்க்கம் தேடி வரும்.

* வெற்றி பெற விரும்பினால், யாருடைய வளர்ச்சி கண்டும் பொறாமை கொள்ளாதே.

* உலகம் ஒரு சத்திரம். இதில் தங்கி இளைப்பாறவே வந்திருக்கிறோம். இதை நிரந்தரமெனக் கருதாதே.

0 comments:

Post a Comment